Friday, April 19, 2019

இருளினிது


வெளிச்சம் சிறிக்கும் ஒரு திசைக்கு
அனிச்சை செயலாய் எதிர் முனையில்
துணிச்சல் தெறிக்க இருள் காட்டில் - என்
தனித்த தேடல்கள் (பலர்க்கு) அதி விசித்திரம்

ஒளியின் பாதையில் இடர்ப்பட்டால் தான்
உருவாய் எதுவும் வெளிப்படுமாம்
ஒளியும் தீண்டா பெரும் கடல்களுமிங்கே
இருந்தும் இல்லாததாகிடுமாம்

சூரியன் சேர பறந்திடும் பீனீக்ஸ்
வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சிகள்
தலைமையை தேடும் தமிழ்க்குடி மக்கள்
வெளிச்சத்தின் வாசலில் எத்தனை கூச்சல்

இருளை தேடு இருளிதன் அருளை தேடு
உலகை காண வெளிச்சம்  தேவை
உன்னை காண இருளிது போதும்
உண்ணுள் உலவும் உலகுக்குள்ளே
உன்னை நீயும் கண்டுகொள்ள
இவ்வுலகம் கானா உன்னை காண
உனக்கும் தெரியா உன்னை தேட
வேண்டுமே வேண்டு நீ  இருளின் சேவை

Monday, April 15, 2019

Why we came

Kissing my eyes, I see the sun
I find us two, Cuddled as one
Puzzled it looks,  But it looks fun
It still goes on,  the stupid television

I try to leave the bed
without making a thud
The wet wooden floor
Tells me we drank till four
I close them both
The curtains, the glass window door
I crawl back in to you
Like we were before
It wakes you up
And i whisper sleep some more
I can see the smile,
A little one for sure
And i really want to ask you then
If that makes you to ...  love me more

Sleep some more sleep some more

We were once at the movies,  a classic
It made you weep and me a little sick
And some dialogues were  "talkin-nu-me" !
Some eyes,  glaring stare, Like in an jap anime,
Passing through you and closing in on me
Like itwould end up being very real
And i thought to myself,  what if, 
we were the movie
And those were the people,
who had come to see.
I shared that thought with you that moment
I saw you smile
A little one for sure
Leaning on my right arm, you could  sleep it off
And i really wanted to ask you then too
To love me more,
If that makes you to.....  love me more

Instead i sang ..
Sleep some more sleep some more

We were once,  In the beach lying lame
You saw a constellation and i spotted its name
You asked me then, what if now
there be a couple, playing the same game
Stargazing us like we gaze at them
Then you laughed at yourself
Cause you were talking like me
burrowing the sand beneath my back
You cuddled like a calf
I told you then,
That the other couple in the star
Were no one new,  but the very both of us
In a different birth in a different shape
In a different place,  in a different age
You were a caged courtesan  and i was a slave
With eternal youth we strong and brave
We were destinded to be gether but still away
We were both wanting to be loved
without any pity or any shame
Like the humans of the earth

Like the humans of the earth
We wanted to be wrong
We wanted to be alive
We wanted to grow old
We wanted to be one and that is how we came

Like the humans of the earth
We wanted to have very little time
But it use well and make our claim

Like the humans of the earth
We wanted to be loved
Like all the other humans of the earth
Who were all from distant stars
To love and to be loved is why we all came

I finish so and find you asleep
I was wondering how much you heard...
I could have woke you up and asked you then..

Instead i sang ..
Sleep some more sleep some more....

Monday, April 8, 2019

Seethayanam

கனவினில்  ஒருநாள் விசும்பலின் சத்தம்,

பெண்ணினை ப்பார்த்தால் பேதைப்போல் உருவம்.

ஸ்ரீராமனின் கதையோ யாவர்க்கும் தெரியும்,

என் கதை கேளென சீதையின் வருத்தம்!


இன்றிங்கு வந்திருப்பதோ  சீதாபிராட்டி,

என்றே நான் துவங்கவிட்டேன் தலையையும் ஆட்டி,

ராமனவன் பொம்மையை கண்முன் நிறுத்தி,

நற்கேள்விகள் கேட்டாள் வதக்கி வாட்டி.


....


ராவணன் என்றுமோர் ராட்சதன் ஆயினும்,

திராவிடம் போற்றிடும் கண்ணியம் கொண்டவன்.

ராமனும் கற்றிட வேண்டுமே அவனிடம், 

என்றுதான் சொல்லுதே பெண்மனம் என்னிடம்.


கல்லையும் பெண்ணென மாற்றிடும் வரதனே

மலையினை கடலினை நீ கடப்பதும் எப்படா

ஒவ்வொரு கல்லிலும் அகிலையை கண்டயோ

ஒவ்வொரு துளியுமே காய்ந்திட நின்றயோ


என்னையே என்னியே கரைந்திடும் வேளையும் 

உன்னையும் எண்ணியே வாடுதல் என் வேலையா

என்னிலே உள்ளதீ உடம்பெல்லாம் பற்றியும் 

உன்பெயர் சொல்லியே அபலைநான் போற்றவா


இங்கு வாழ் ராவணன் நல்லதோர் பாடகன்

வீணையை மீட்டிட கற்றவன் ஆனதால்

என் மனமின்றியே என்னையும் மீட்டிளான்

என்றுதான் உணர்ந்து நீ தாமதம் செய்தயோ


ஆரியன் என்பதால் ஆறியே வருவியோ

வாலியை வீழ்த்தவே மறைந்து நீ எய்தனை

மறைபொருள் மாலவா மாயங்கள் கற்று நீ 

சூரியன் மறையவே காத்துதான் நின்றயோ


கூரிய பற்களை கொண்டதோர் குரங்கினம்

அவர்போல் உன்மனம் தவ்வுதோ தாவுதோ

ஆழிசூழ் உலகிதில்  ஒருத்தியின் விழியிலே

வழிந்தி டும் நீருக்கே மகத்துவம் உள்ளதோ


 விரகத்தின் முற்களை இறுக்கமாய் அணைக்கவோ 

 விரதமே இதுவென விரும்பி நான் ஏற்கவோ

 பேதையின் மனமிதை பெயர்த்து நான் எடுக்கவோ 

 ஊரை நான் அஞ்சியே உண்மையை மறைக்கவோ


நீயில்லா அரண்மனை எனக்குமோர் அடுமனை

என்றுதான் என்னியே வந்தனள் உன்னுடன்

வீரனாய்  உன் பெயர் ஊரெல்லாம் நிலைக்கவே 

பெண்ணிவள் துன்பங்கள் படுதலும் தேவையோ


சீதயைப்பார்!   என சொல்லியே பெண்டிரை

வீட்டிலே பூட்டியே வீண் என செய்குவர்

ஸ்திரீ இவள்  சாபங்கள் மெல்லவே பலித்திட

வீனராய் போகுவர் ஆரியத்தாண்டவர்


திராவிட வீழ்ச்சியை பெண்கொண்டு செல்வதா - சிறு

தீவினை வளைத்திட பார்க்கடலவன் வேண்டுமா

இதை கதை என்றும் நம்புதல்  கற்பனைக்கு இழிவாடா

இதை வடித்திட திருடனும் திருந்தியதேனடா 


ஓவிய ராமனின் உடலெல்லாம் நீலம் பார்

நஞ்சென அஞ்சியே கும்பிடும் உலகைப்  பார்

காவிய ராமனை காந்தியும்  சீண்டிலார் 

தேரிய யாருமே வணங்கிடா இறையைப்பார் 


கரடிகள் குரங்குகள் அசுரராம் திராவிடர்

ஆறறிவு உள்ளவர் எல்லோருமே ஆரியர்

ஆரியன் வேலையே திராவிடம் பழிப்பதே

திராவிடன் வேலையா வீண் வதந்திகள் தாங்குதல் 


பழியினை தாங்கியும் பிரிவினை தாங்கியும்

வெறுப்பினை ஏற்பினும் சிரிப்பினை வழங்குதல் 

இடுக்கணும் வருகையில் நகைத்திட தெரிந்ததால்

இவரது கேளிகள் பொருட்படுத்திலை நாமுமமே


என் கனவிலே வந்தது மைதிலி தானா

தன்மானமே கற்பெனும்  ஈ வே ரா தானா 

ராமசாமி எனும் பெயரினைக் கொண்டே 

சாமியில்லை என்று சொன்ன நம்  பாட்டன் தானா

  

Saturday, July 18, 2015

il aram

நீ  உடுத்திய சட்டைகள்  
அதன் வாசம் எனக்கு பிடிக்கும் 
நீ  உடுத்தாத சேலைகள் 
அதுதான் எனக்கு பிடிக்கும்

வீடெங்கும் உன் பொருட்கள்
நீ இல்லாத பொழுதினிலும் என்னோடு கதை பேசும்

நான் பருகிய உன் வாசமும்
சட்டையில் சிக்கிய நீள்முடியும்
சாலையெல்லாம் என்னோடு  உறவாடும் 
நீயில்லா  நேரங்கள் 
என் வாழ்வில் இல்லவேயில்லை

En vazhvil illave illai
Nee illaa kanaa kandeyn enil
Enaku vizhigaley theyvai illai
Nee illaa oru nimidam
aruvadhu murkal theikiradhe
Nee illa neyram sonnal
Kadigaram kaaram kaatidudhe 

Wednesday, October 16, 2013

0110-Sampangi ! Or Kanavu !

0110 - சம்பங்கி ! ஓர் கனவு 


பூஜ்ஜியம் ஒன்று ஒன்று பூஜ்ஜியம்
என்னுடன் நின்று பூவையின் போர்களம்
 கனவிலும் கானா காட்சிகள் கண்டினும்
கனவே வெறுங்கனவே
என என் கண்களே சொல்லிடும்

உச்சியில் தந்ததோ
உச்சியும் குளிர்ந்து உன்
உள்ளமும் குளிர்ந்திட

நெற்றியில் நட்டதோ
நெறிகள் மீறாது
நேசம் பகிர்ந்திட

கன்னங்களில் அச்சு
கலங்கமில்லாமல் தான் வைத்தேன்
கண்டெடுத்தவன் போல் நீ
கானவேண்டும் என்றென்னி

முகமெல்லாம் நிறைத்தேன்
ஈரம் மாற்ற ஈரம் செய்தேன்
ஈர நெஞ்சின் தீரம் பார் தோழி

உன்னை என்னை கேட்டுக்கொன்டா
சுழல்கிறது இந்த வாழ்வு
சொக்கட்டான், சதுரங்கம், சோழி!

நிலவை தான்டிய பொழுதே
நிலைமை மறந்தேன்
கழுத்தில் இட்டது தான்
கலக்கத்தின் ஆரம்பம்
அத்துமீறல்களுக்கும்
அர்த்தமுள்ளதோவெனவொரு தேடல்

என்னை மீறும்
என்னம் வந்தே
எல்லை மீற
முகத்திரை விலகியதே
அகம் நாடயிது நீ என்றே
அடிநெஞ்சம் உளறியதே
எனக்கே என் தேவைகள்
ஏனோ இன்று புரிந்ததே

நட்போடு தீராது
காதலிலும் சேராது
புது வித உறவிதுயாது
யாரிடமும் கேட்டறியாது
அன்பிதை உணர்ந்தேன்
மொழியிலாமல் உறைத்தேன்

வீணையின் நரம்புகள்
பட்டினில் போர்த்தி
மென்கழுத்ததை செய்தார்ப்போலும்
பட்டுநூல்களை பக்குவமாய்
பாகு பிடித்தே
யாழ் கம்பிகள் செய்தார்ப்போலும்
ஒரு படைப்பு

மனிதன் படைப்பென்றால் - இசைக்கருவி
மரத்தினில் வாழ்ந்திருந்தால்- இன்னிசைக்குறுவி
மனமெல்லாம் கொள்ளை கொள்பவலே
நீ அறிவாயா நீயே எனக்கு இசையறுவி

யாழோ குழலோ நாதம், என மென்குறள்
யாரோ சொல்வார் எவ்விதம் ஒலிக்குது நின் குறள்
விண்னவர் கண்டிலர்,நாரதன் சாட்சி
(யாவர்க்கும்) நலம்புரி சங்கு அதை முத்தமிட்டு
நன்றிகள் சொல்வதே எனக்கு மீட்சி

அது ஸ்வரம் பிடித்து
எனை ஊக்குவித்த
நாட்களின் என்னிகை நீ உணராய்
ஆயினும் நான் மறவேன்
ஆவினை கன்றே மறந்தாலும்
ஆவியை ஊனே மறந்தாலும்
நான் மறவேன் நான் மறவேன்

அபஸ்வரம் என்னை,
செல்லமாய் தட்டும்
தால ஜதிகள் தந்து காபாற்றும்
உன் இதய துடிப்பு,
ஆதித்தாலம் அஃது தானோ
என்ற நினைப்பும் எனக்கு இருக்கு

என்னை என்னி துடிக்கிற இதயம்
அதை அன்பொடு தாங்கும் தாய்மை
அங்கும் முத்தங்கள் பதித்திருந்தால்
தவறொன்றுமில்லை
அறிந்தும் அறியாமலும் நான் உன் பிள்ளை

குழல் வாய்
சங்கே சங்கு
அடித்தொன்டை
மார்பு மத்தி
மூச்சுக்குழாய்
மேல்வயிறு
அடிவயிறு

ராகங்கள் உருண்டுவரும்
தலைக்கீழ் அறுவி
என்னை பொருத்த வரையினில்
நீயோர் அதிசையப்பிறவி
உன்னில் நனைந்தேனே நான்
பல நாள் உருகி உருகி

முத்தங்களால் படிக்கட்டு
கட்டினேன் நான் இடம் விட்டு
அதில் வழுக்காமல் நகருமோ
என் நாட்கள் இனி பிடிகொண்டு

சம்பங்கி விரல்களுக்கு
முத்தங்கலே ஏற்ற பரிசு,
அவை மன்னிக்காத வரை
இவன் பாழ்நிலம், தரிசு
என்னையும் ஏற்கும் உன்
சிறு இதயம் நிஜமாகவே
மிக மிக பெருசு

இப்படிக்கு நன்றியுள்ள ஜீவன்
போல் இருக்க என்றும் நினைக்கும் இவன்
ஸ்வரமே வீணைக்கு ஆதாரம்
புரியவைத்தாய், அன்பே பெண்மைக்கு ஆதாரம்
பேரன்பாய் செய்கிறாய் நீ அதிகாரம்
ஆதலால்தானடி 
உன்னை சுற்றியே என் கடிகாரம்

Friday, October 21, 2011

aam aam AM


நேற்று நிறைந்ததென கனவை
இன்னுலகில் பகிர்ந்து உவந்தேன் 
நேற்று நடந்ததுவுஊம கனவே
எனச்சொல்லி கண்கள் சுட்டுக்கொண்டேன் 

நேரம் வரவில்லை எனச்சொல்லி 
கடி காரத்தை குறைச்சொல்லவோ 
ஈரம் அற்றவர் பால் வைத்தேன்
நன்பிக்கை என் மடமை வேறென்ன நான் சொல்லுவேன் 

வீழ்ந்திலேன் என்றே சூளுரைத்து
வானெங்கும் பறந்திடவோ 
சிரகுகள் நோகும் முன்னமே 
தரை இறங்கவே சொல்லுகின்றார் 

இறகின்றி பிறந்தவன் நான்
சிறகின்றி பரப்பேனோ  
அது சாத்தியம் கனவில் மட்டும் தான்
என்றால் பறந்தே போவேனோ

பாட்டில் பதித்த இதை
நாட்டில் சொல்ல அச்சம்மில்லை
கேட்பவர் யார் சொல்லடி 
கன்னமா எனக்கும் உடன் இல்லையே

கண்கள் கலங்குதலை
கண் நோய் என்று உரைபேன் 
என்நோய் எதுவென்று
யாரிடம் நான் கேட்பேன்
மருந்தே நோயானால் 
மருதுவனாயினும் 
பாவம் என்ன செய்வான் 


சினஞ்சிறு வயதில்  ....

Saturday, May 14, 2011

 இன்பத்தமிழ் 

காட்சி  :

<<<<தலைவன்  கணிப்பொறியில்  கதைத்து  கொண்டே  கடமையும்  பார்க்கிறான்,

தலை  துவட்டிக்கொன்டே  வரும்  தலைவி,
தலைவன்  தின்  தோள்களை  தின்பது  போல்  , பார்வை மேய்கிறாள்,

அதை உணர்ந்தரியாதிருக்கிறான்  தலைவன் >>>>


முதல் துளி முதுகில்
மற்றொன்றோ   தரையில்
மூன்றாவது  பின்கழுத்தில்
"Oops !" என்றாள்
 அனிச்சை  செயலாம்  அது

ஒரு  பதிலும்  இல்லை

கோவத்திற்கு  பதிலாய்  மறுமுயற்சி

"ம்ம்ம்  ... "

மீண்டும்  ஒரு  முயற்சி - தீவிரமாய்,
பெண்மையிலும் மென்மையிலும் சிறு  பெயர்ச்சி

குழல்  மேகம்

பொழிந்தது  மழை மோகம்,

பனி  துளியின்  சூழ்ச்சிக்கு

கிட்டியது  புன்னகை  பரிசு

"Just this one" .. 

பார்வை  தொடர பதற்றம்  இவனுள்
"U know இது ... kinda important " .. 

நகரா  பார்வை
நயாக்ரா நீர்  வீழ்ச்சி
"quick sec, okay" ..
பதிலுக்கு  கண்ணால்  நகைத்தாள்
சிரிப்பொலி   ஏதுமில்லை
பரிமாற்றமங்கள், பரிபாஷைகள்.

பனித்துளிகளின்  சூழ்ச்சியோ
- பளீச்சிடும்
புன்னகைகளில்  முடிந்தது
உற்றதே  உற்றதே  அப்பரிசு

கூந்தலை  நூல்கன்டாய் கொண்டு

முள்ளைப்பூ விரலூசி தைத்து காற்றிலே சித்திரைப்பூத்தையல்,
தைத்த படியே, பார்வை வைத்தபடியே, நெருங்கிவர

இடம் வளம் கால்கள் ஒரே நேர்க்கோட்டில் நடை பதிக்க

இடம்  வளம்  என இடை மட்டும்  ஊஞ்சல்
உள்மூசில்  உஷ்ணம் , உள்ளமும்  ஊஞ்சல்

பன்னீர்  பூக்களின்  சூழ்ச்சி  ஆரம்பம்

பறந்து  விரிந்த  தோள்கள்  மேல் 

அவள் விரல் நாட்டியம் அரங்கேற்றம்
அடடா இது  எப்படி சாத்தியம்
சத்தம்  இல்லை  ஆனாலும்  இதுவுமோர்  வகை  தோல்(ள்) வாத்தியம்

பெண் விரல்கள்  பட்டது  - பட்டு  அது 

திரண்ட  தோள்களின்  தோய்வையது  கலைந்தது

பன்னீர் பூக்களின்  சூழ்ச்சியோ 

பனிவிலகும் 
முத்தங்களில்  முடிந்தது 
உற்றதே  உற்றதே  இப்பரிசு

அலை மீன்டினும்  நுரை  காணும்  கறையழகு

நிறமில்லா முத்தக்கரை  கன்னத்தில்  பேரழகு
இமைக்கொட்டும்  விண்மீன்கள்  இரவில்  வானழகு
இமய்கொட்டா  இவள் கண் மீன்கள் எப்போதும் தானழகு

பிள்ளை  சிரிப்பை  சிந்தியவள்

புன்னகை  போரில்  முந்தியவள்
போக்கிரியாய்   மாறுகிறாள்
பொல்லாத  பார்வையால்
இன்னும்  இன்னும்  கோருகிறாள்

கரு  விழி  பேசும்  குறுமொழி

அதை மொழிப்பெய்ர்த்திடவே
வந்தார்  வாத்சாயன  குரு
விளக்கம் இனி வருவபை


"வெட்கம்  சற்றே மறக்கும் ஆவல்

உண்டானதே என்றுமிலாமல்  இன்றே 

வந்துவிடு  நீ  உடனே ,
இல்லையெனில்  வெட்கம்  மீண்டும்  வந்துவிடும்  சட்டென்றே "

கூர்விழி கூறுமொழி

நேர்மொழி  என  உணர்ந்தான்
தேரழகை  புணர்ந்தான்

இசைந்தால்  இணங்கி

இசைத்தான்  நெருங்கி
அசையும் முற்கள்
அசைந்ததா  என்ன

யாரறிவார் ..

சரணம்  முடிந்தும்

முடியா  வீணை
சில  சிணுங்கல்கள் ......


<<<< இருவர் இசையில் நாம் யார் அபஸ்வரம்
இனபத்தமிழ் படும் பாடு ...........
இனி அவர் பாடு
இருந்தால் "தலைவி" - போய் கொண்டாடு
இல்லையெனில், ஹ .... கனவில் துணை தேடு >>>