இன்பத்தமிழ்
காட்சி :
<<<<தலைவன் கணிப்பொறியில் கதைத்து கொண்டே கடமையும் பார்க்கிறான்,
தலை துவட்டிக்கொன்டே வரும் தலைவி,
தலைவன் தின் தோள்களை தின்பது போல் , பார்வை மேய்கிறாள்,
அதை உணர்ந்தரியாதிருக்கிறான் தலைவன் >>>>
முதல் துளி முதுகில்
மற்றொன்றோ தரையில் மூன்றாவது பின்கழுத்தில்
"Oops !" என்றாள்
அனிச்சை செயலாம் அது
ஒரு பதிலும் இல்லை
கோவத்திற்கு பதிலாய் மறுமுயற்சி
"ம்ம்ம் ... "
மீண்டும் ஒரு முயற்சி - தீவிரமாய்,
பெண்மையிலும் மென்மையிலும் சிறு பெயர்ச்சி
குழல் மேகம்
பொழிந்தது மழை மோகம்,
பனி துளியின் சூழ்ச்சிக்கு
கிட்டியது புன்னகை பரிசு
"Just this one" ..
பார்வை தொடர பதற்றம் இவனுள்
"U know இது ... kinda important " ..
நகரா பார்வை
நயாக்ரா நீர் வீழ்ச்சி
"quick sec, okay" ..
பதிலுக்கு கண்ணால் நகைத்தாள்
சிரிப்பொலி ஏதுமில்லை
பரிமாற்றமங்கள், பரிபாஷைகள்.
பனித்துளிகளின் சூழ்ச்சியோ - பளீச்சிடும்
புன்னகைகளில் முடிந்தது
உற்றதே உற்றதே அப்பரிசு
கூந்தலை நூல்கன்டாய் கொண்டு
முள்ளைப்பூ விரலூசி தைத்து காற்றிலே சித்திரைப்பூத்தையல்,
தைத்த படியே, பார்வை வைத்தபடியே, நெருங்கிவர
இடம் வளம் கால்கள் ஒரே நேர்க்கோட்டில் நடை பதிக்க
இடம் வளம் என இடை மட்டும் ஊஞ்சல்
உள்மூசில் உஷ்ணம் , உள்ளமும் ஊஞ்சல்
பன்னீர் பூக்களின் சூழ்ச்சி ஆரம்பம்
பறந்து விரிந்த தோள்கள் மேல்
அவள் விரல் நாட்டியம் அரங்கேற்றம்
அடடா இது எப்படி சாத்தியம்
சத்தம் இல்லை ஆனாலும் இதுவுமோர் வகை தோல்(ள்) வாத்தியம்
பெண் விரல்கள் பட்டது - பட்டு அது
திரண்ட தோள்களின் தோய்வையது கலைந்தது
பன்னீர் பூக்களின் சூழ்ச்சியோ
பனிவிலகும் முத்தங்களில் முடிந்தது
உற்றதே உற்றதே இப்பரிசு
அலை மீன்டினும் நுரை காணும் கறையழகு
நிறமில்லா முத்தக்கரை கன்னத்தில் பேரழகு
இமைக்கொட்டும் விண்மீன்கள் இரவில் வானழகு
இமய்கொட்டா இவள் கண் மீன்கள் எப்போதும் தானழகு
பிள்ளை சிரிப்பை சிந்தியவள்
புன்னகை போரில் முந்தியவள்
போக்கிரியாய் மாறுகிறாள்
பொல்லாத பார்வையால்
இன்னும் இன்னும் கோருகிறாள்
கரு விழி பேசும் குறுமொழி
அதை மொழிப்பெய்ர்த்திடவே
வந்தார் வாத்சாயன குரு
விளக்கம் இனி வருவபை
"வெட்கம் சற்றே மறக்கும் ஆவல்
உண்டானதே என்றுமிலாமல் இன்றே
வந்துவிடு நீ உடனே ,
இல்லையெனில் வெட்கம் மீண்டும் வந்துவிடும் சட்டென்றே "
கூர்விழி கூறுமொழி
நேர்மொழி என உணர்ந்தான்
தேரழகை புணர்ந்தான்
இசைந்தால் இணங்கி
இசைத்தான் நெருங்கி
அசையும் முற்கள்
அசைந்ததா என்ன
யாரறிவார் ..
சரணம் முடிந்தும்
முடியா வீணை
சில சிணுங்கல்கள் ......
<<<< இருவர் இசையில் நாம் யார் அபஸ்வரம்
இனபத்தமிழ் படும் பாடு ...........
இனி அவர் பாடு
இருந்தால் "தலைவி" - போய் கொண்டாடு
இல்லையெனில், ஹ .... கனவில் துணை தேடு >>>
No comments:
Post a Comment